திருகோவிலூர் நூலகம்

புதன், 9 நவம்பர், 2011

நூலகத்தின் புரவலர்கள்



நூலகங்களுக்கு பெற்றோர்கள்
குழந்தைகளுடன் வர வேண்டும் 

திருக்கோவிலூர், பிப். 22:
 நூலகங்களுக்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் வர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் தெரிவித்தார்.
 திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் கிளை நூலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.
 ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இந்நூலககத்தில் நூல் இரவல் பிரிவு, குறிப்புதவி பிரிவு, நாளிதழ் பிரிவு, இணையதள பிரிவு, சிறுவர் பிரிவு என வாசகர்களின் நலன்கருதி ஏற்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
 கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு மணி நேரம் இணையதளம் பயன்படுத்துவோருக்கு குறைந்த கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
 இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு குழந்தைகளும் பள்ளிக் கல்வி, உடற்கல்வி எவ்வளவு அத்தியாவசியமோ, அந்த அளவுக்கு பொதுக் கல்வியும் மிகவும் அவசியம். அந்த பொதுக்கல்வி அனைத்தும் நூலகங்களில் உள்ளது.
 எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குத் தேவையான நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், அந்நேரங்களில் பெற்றோர்களும் அவர்களுக்குத் தேவையான நூல்களை எடுத்து வாசிக்கலாம்.
 இதை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 இதைத்தொடர்ந்து இந்நூலக வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியை சாந்தி ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெங்கட், வினோத்குமார் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர்.
 மேலும் ஓய்வுப்பெற்ற சுகாதார ஆய்வாளர் முக்கண்ணன், நல்லதம்பி ஆகியோர்களுக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.
 அப்போது வாசகர் வட்டக்குழுத் தலைவர் உதியன், நல்நூலகர் மு.அன்பழகன் மற்றும் நூலகர்கள் த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலபதி, பா.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

படவிளக்கம்
----------------------
திருக்கோவிலூரில் மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகனிடம் (இடமிருந்து 2-வது) நூலக வளர்ச்சிக்காக தலா ரூ.1000 செலுத்திய  புரவலர்கள்.



வியாழன், 24 மார்ச், 2011

நமது உலகம் நூலகம் . பேச்சு,கட்டுரை & வாசகப் போட்டி

நன்றி .தினமணி

நூலகப் போட்டியில் மாணவிக்கு நூல்கள் பரிசு

திருக்கோவிலூர், ஜூன் 22:
திருக்கோவிலூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற நூலக கோடை முகாமில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவிக்கு புதன்கிழமை நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமில், திருக்கோவிலூர் ஒன்றிய அளவில் வெற்றிப்பெற்ற வாசவி உதவிபெறும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ச.புஷ்பவள்ளிக்கு, பொது நூலகத்துறை சார்பில் நல்லாசிரியர் புலவர் ந.தேசிகன் நூல்களை பரிசாக வழங்கினார்.
அப்போது வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிஞர்.உதியன், எழுத்தாளர் விருதுராஜா, நூலகர்கள் மு.அன்பழகன், த.சர்வர்கான், மொ.வெங்கடாஜலபதி, பா.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.













Posted by Picasa

வகுப்பறை நூலகம் தொடக்கம்.




Posted by Picasa

நாளிதழ் செய்திகள்

தினமனி 23 ஜூன்.2011
தினமலர் 23 .ஜூன் 2011
தினமனி

இணையதள பிரிவு தொடக்கம்


Posted by Picasa